Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு பள்ளி மற்றும் அரசு கலை கல்லூரியில் வல்லபாய் பட்டேல் பிறந்த தின கொண்டாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொன்டனர்.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். வல்லபாய் படேல் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. சேமிப்பு தினம் என்பதால் மாணவ, மாணவியர்களுக்கு சேமிப்பு பழக்கம் குறித்து சொல்லி, சேமிப்பு தொடங்கப்பட்டது. விடியல் பிரகாஷ், தன்னார்வலர்கள் சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.